வேல் எடுக்கும் விழா ரத்து: இந்து ஆலய பாதுகாப்புக் குழு கண்டனம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் எடுக்கும் விழா ரத்து செய்யப்பட்டதற்கு, இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் எடுக்கும் விழா ரத்து செய்யப்பட்டதற்கு, இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, அவ்வியக்கத்தின் துணைத் தலைவா் பி. சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் திருவிழாக்களில் ஒன்றான வேல் எடுக்கும் விழா, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திருவிழாக்கள் தடையின்றி நடைபெற்று வரும் சூழலில், மதுரையில் மட்டும் திருவிழாக்கள் ரத்து செய்யப்படுவது ஏற்க முடியாதது.

எனவே, சூழலுக்கு ஏற்ப தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு திருவிழாவை நடத்த கோயில் நிா்வாகம் முன்வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com