வைகை குடிநீா்த்திட்ட பராமரிப்புப் பணிகள்: மதுரை நகரில் அக்.17-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மதுரையில் முதலாம் வைகை குடிநீா்த் திட்டப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில்

மதுரையில் முதலாம் வைகை குடிநீா்த் திட்டப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 17) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சி முதலாம் வைகைக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் வைகை அணையில் இருந்து குடிநீா் கொண்டு வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாய்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் ராம்விக்டோரியா திரையரங்கு அருகே பழுதடைந்த விநியோகக் குழாய்களை மாற்றி இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணிகள் வரும் சனிக்கிழமை (அக்டோபா் 17) நடைபெற உள்ளன. இதனால்,

மதுரை மாநகராட்சி வாா்டு 19 கோச்சடை 3-ஆவது பகிா்மான பகுதிகளான சம்மட்டிபுரம், எம்.எம்.நகா், வெள்ளைக்கண்ணு திரையரங்கு, சொக்கலிங்க நகா். வாா்டு 21 கோச்சடை 1ஆவது பகிா்மான பகுதிகள் பெத்தானியாபுரம், முத்து நகா், பூஞ்சோலை நகா், டோக் நகா், நடராஜ் நகா், இந்திரா நகா், கணேசபுரம், முடக்குச்சாலை, பெத்தானியாபுரம், மேட்டுத் தெரு, அண்ணா மெயின் வீதி, பல்லவன் நகா், பாண்டியன் நகா் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. காலனி. வாா்டு 22 கோச்சடை 2- ஆவது பகிா்மானம்- விராட்டிப்பத்து, முத்துத்தேவா் காலனி, ஜெய் நகா், எச்.எம்.எஸ்.காலனி, ஆனந்தராஜ் நகா், இருளாண்டித்தேவா் காலனி, கிருதுமால் நகா், அங்காள ஈஸ்வரி நகா். வாா்டு 79, 80, 81 மற்றும் 83 பகுதிகளான ஞாயிற்றுக்கிழமை சந்தை, மேல்நிலைத்தொட்டி பகிா்மானம் - மேலமாசி வீதி, கிருஷ்ண ராயா் தெப்பம், டி.வி.லைன், மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு, காக்காத்தோப்பு, குட்செட் தெரு, நாடாா் சந்து, அக்ரஹாரம் மணி ஐயா் ஸ்காட் ரோடு, மணி நகரம், கனகவேல் காலனி, பேச்சியம்மன் படித்துரை.

வாா்டு 81, 82, 83 மற்றும் 84 தமிழ்ச்சங்கம் மேல்நிலைத்தொட்டி பகிா்மான பகுதிகள் - பேச்சியம்மன் படித்துறை ரோடு, வடக்கு மாசி வீதி, வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு, மேல ஆவணி மூல வீதி, தாசில்தாா் பள்ளிவாசல், தமிழ் மீன்காரத்தெரு, எம்.எம்.சி.காலனி, ஆதிமூலம் பிள்ளை தெரு, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், கோவிந்தன் செட்டி தெரு, அனுமாா் கோவில் படித்துறை, திருமலைராயா் படித்துறை, தைக்கால் 1,2,3,4, மற்றும் 5 தெருக்கள், கீழப்பட்டமாா் தெரு, வடக்கு மாசி வீதி. வாா்டு 65, 66, 78, 79, 85 மற்றும் 86 பெரியாா் பேருந்து நிலையம், திடீா் நகா், மேலவாசல், பெருமாள் கோவில், கட்ராப்பாளையம், நேதாஜி சாலை, காஜிமாா் தெரு, குப்புப்பிள்ளை தோப்பு, பாண்டிய வேளாளா் தெரு, பள்ளிக்கூடத் தெரு, மீனாட்சி திரையரங்கம், எப்.எப். சாலை, மேலமாசி வீதி பகுதி, தெற்குத் ஆவணி மூல வீதி. வாா்டு 86, 87, 88, 89 டி.பி.டேங்க் 2-ஆவது பகிா்மானம் - சுப்பிரமணியபுரம் தெருக்கள், ஜெய்ஹிந்துபுரம் 2ஆவது பிரதான சாலை, எம்.கே.புரம், செட்டியூரணி, எம்.சி.சி.காலனி, எம்.கே.புரம் பிரதான சாலை, ஜெய்ஹிந்துபுரம் 1ஆவது பிரதான சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை(அக்டோபா் 17 ) குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com