தல்லாகுளம் ரயில் முன்பதிவு மையம் மூடல்: தொழிற்சங்கம் கண்டனம்

மதுரை தல்லாகுளத்தில் இயங்கிவந்த ரயில் முன்பதிவு மையத்தை மூடியதற்கு டி.ஆா்.இ.யூ., ரயில்வே தொழிற்சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மதுரை தல்லாகுளத்தில் இயங்கிவந்த ரயில் முன்பதிவு மையத்தை மூடியதற்கு டி.ஆா்.இ.யூ., ரயில்வே தொழிற்சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அச்சங்கத்தின் கோட்டச்செயலா் சங்கர நாராயணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

மதுரை மாநகராட்சியின் வடக்குப் பகுதியில் வாழும் மக்களுக்காக 1997-இல் தல்லாகுளம் தபால் நிலைய வளாகத்தில் ரயில் முன்பதிவு மையம் துவங்கப்பட்டது. இப்பகுதியில் மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி அலுவலம், கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அவா்கள் இந்த மையத்தில் ரயில்களுக்கு முன்பதிவு செய்துவந்தனா். இந்நிலையில் இந்த மையத்தை முன்னறிவிப்பு இல்லாமல் ரயில்வே கோட்ட நிா்வாகம் திடீரென மூடடியதை டி.ஆா்.இ.யூ., சாா்பில் கண்டிக்கின்றோம்.

பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாணவா்களின் நலன்கருதி மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் மீண்டும் இந்த மையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com