மதுரை மாவட்டத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா: 3 போ் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் மேலும் 4,462 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் ோ்ந்த 75 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்டவா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுபவா்களில் 61 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா். அவா்கள் மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மூன்று போ் பலி: கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 77 வயது முதியவா், 77 வயது மூதாட்டி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி ஆகியோா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

சிகிச்சையில் 803 போ்: மதுரை மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் 17,710 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 402 சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 16,505 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 803 போ் கரோனா தொற்று பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com