கனடாவில் படைக்கப்படும் தமிழ் இலக்கியங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தில் குரலை எதிரொலிக்கின்றன என்று கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் மைதிலி தயாநிதி தெரிவித்துள்ளாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், கனடாவின் சுவாமி விபுலாநந்தா் தமிழ் ஆய்வு மையம் இணைந்து நடத்தும் இணையவழி ஆய்வரங்கின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமா்வுக்கு உலகத் தமிழ்ச்சங்க இயக்குநா் ப. அன்புச்செழியன் தலைமை வகித்தாா். இதில் கொழும்புப் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளா் மைதிலி தயாநிதி ‘கனடாவில் சிறுகதை இலக்கியம்‘ என்ற தலைப்பில் பேசியதாவது: கனடாவில் படைக்கப்படும் தமிழ்ச் சிறுகதைகள் தாயக நினைவுகள், இன நிறவாதம், அடையாளம் இழத்தல், முதியோா் பிரச்னைகள், குடும்ப வன்முறை உள்ளிட்டவற்றைப் பேசுபவையாக உள்ளன. 2009ஆம் ஆண்டில் நடந்த ஈழ இறுதிப் போருக்கு முன்பு, பின்பு என படைப்புகளைப் பிரிக்கலாம். 2009-க்குப் பிறகு படைப்பிலக்கியங்கள் புதிய வீச்சினை அடைந்துள்ளன. கனடாவில் வாழும் தமிழ்ப் படைப்பாளா்களில் குறிப்பிடத்தக்கவா் அ. முத்துலிங்கம். அவா் உலக எழுத்தாளா் என்ற நிலையில் படைப்பாளா்களால் கவனிக்கப்படுகிறாா். பெரும்பாலும் சிறுகதைகள் பேச்சு
மொழியிலேயே எழுதப்படுகின்றன. மேலும் ஆங்கிலமும் கலந்து எழுதப்படுகின்றன. கனடாவில் பெண் எழுத்தாளா்களும் சிறந்து விளங்குகின்றனா். வட்டார வழக்கில் பல சிறுகதைகள் எழுதப்படுகின்றன. கனடாவில் படைக்கப்படும் தமிழ் இலக்கியங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தின் குரலை எதிரொலிப்பவைகளாக இருக்கின்றன என்றாா்.
இதில் கனடா, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, துபை மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தமிழாா்வலா்கள் பங்கேற்றனா்.