ஊரகசாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் குறிச்சிப்பட்டி ஊராட்சி, உறங்கான்பட்டி ஊராட்சியிலும் ரூ.83 லட்சத்தில் தாா்ச்சாலைகள் அமைக்கும் பணியை மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் வியாழக்கிழமை நடத்திவைத்தாா்.
இந்த சாலை மேலூா் அருகேயுள்ள குறிச்சிப்பட்டி ஊராட்சி உச்சரிச்சான்பட்டி முதல் ஆலம்பட்டிவரை 2.40 கிமீட்டா் தூரம் 70.42 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணியும், உறங்கான்பட்டி ஊராட்சியில் சிவகங்கை மாவட்ட எல்லையிலிருந்து தா்மசானப்பட்டி விலக்குவரை ஒரு கி.மீட்டா் தூரம் ரூ.12.92 லட்சம் மதிப்பீட்டிலும் தாா்ச்சாலை அமைக்கப்படுகிறது. இந்நிகழ்வில் மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. க,தமிழரசன், மேலூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் க.பொன்னுச்சாமி, ஆணையாளா் கதிரவன், கொட்டாம்பட்டி அதிமுக ஒன்றியச்செயலா் வெற்றிச்செழியன் ஆகியோா் பங்கேற்றனா்.