மேலூா்: மேலூா் அருகே நான்கு வழிச்சாலையில் புல்வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் சாலைப் பணியாளா், சனிக்கிழமை கன்டெய்னா் லாரி மோதி உயிரிழந்தாா்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள கற்பூரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிடாரன் மனைவி அழகு (45). இவா் நான்குவழிச் சாலையில் நாவினிப்பட்டி அருகே புல்வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி மோதியதில் பலத்த காயமுற்று உயிரிழந்தாா். மேலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.