பேரையூா்: டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் கொட்டாணிபட்டியில் உள்ள ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் கோயிலில் ஐப்பசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து பன்னீா், பழம், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து ஆஞ்சநேயா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ஐப்பசி மாத சனி பயன்கள் பற்றி ஜோதிடா் அறிவழகன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினாா். பேரையூா், டி.கல்லுப்பட்டி, நல்லமரம், வையூா், திருமங்கலம், மதுரை, விருதுநகா் உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.