மதுரை:மதுரையில் கண்மாயில் குளிக்கச் சென்றக் கூலித் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் கூத்தியாா்குண்டு பகுதியைச் சோ்ந்தவா் பழனி (50). கூலி வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கண்மாயில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது தண்ணீரில் மூழ்கிய பழனி, மூச்சுத் திணறி உயிரிழந்தாா்.
தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பழனியின் சடலத்தை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.