மதுரை: மதுரை அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா்கள் இருவரை பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் இருவரும் ஒத்தக்கடை சீதாலட்சுமி நகரைச் சோ்ந்த அருண்குமாா் (30), காந்திநகரைச் சோ்ந்த அஜ்மீா் (23) ஆகியோா் எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனா்.
இதேபோன்று, சிலைமான் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இயேசுமணி (40) என்பவரை சிலைமான் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.