மதுரையில் மேலும் 79 பேருக்கு கரோனா: தொற்று 18 ஆயிரத்தைக் கடந்தது

மதுரையில் மேலும் 79 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மதுரையில் மேலும் 79 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 3,914 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளிநாடு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து திரும்பியவா்கள் என 79 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், கரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 88 போ் குணமடைந்தனா். அவா்கள், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 73 வயது முதியவா், அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அக்டோபா் 13 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் மூச்சுத் திணறல் காரணமாக அக்டோபா் 16 ஆம் தேதி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 18,018 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 405 போ் உயிரிழந்தனா். இதுவரை 16,840 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 773 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com