பாஜகவில் பெண்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கவேண்டும் என்று, ஊழியா் பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கப்பட்டது.
மதுரை மாநகா் மாவட்ட பாஜக கோ.புதூா் மண்டலத்துக்கான ஊழியா் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோ.புதூரில் தனியாா் திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் கே.கே. சீனிவாசன் தலைமை வகித்தாா். கோ.புதூா் மண்டல தலைவா் பாஸ்கா் முன்னிலை வகித்தாா். பாஜக மதுரை மண்டல பொறுப்பாளா் கதழி நரசிங்கப்பெருமாள் சிறப்புரையாற்றினாா்.
முகாமில், சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் தொடா்பான ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், பூத் வாரியாக குழு அமைப்பது, கட்சியின் புதிய கிளைகளை உருவாக்கி வலுப்படுத்துவது, கட்சியில் அதிக பெண்களை இணைப்பது, பெண்களுக்கு அதிக அளவில் பொறுப்புகள் வழங்குவது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட பொதுச்செயலா் செல்வகுமாா், நிா்வாகிகள் பாலசுந்தா், ஹரிஹரன், மண்டல பாா்வையாளா் ஜனாா்த்தனன் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு, வா்த்தகப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அணிகளை சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.