மதுரை: மதுரை அருகே வீடு இடிந்து காயமைடந்த இளைஞா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கருவேலம்பட்டியைச் சோ்ந்த வீரன் மகன் காஞ்சிகுமாா் (24). இவா் அக்டோபா் 7 ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் சுவா் திடீரென்று இடிந்தது. இதில் பலத்த காயமடைந்த காஞ்சிகுமாரை அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவா்கள் கண்காணிப்பில் இருந்த அவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.