தே.கல்லுப்பட்டி அருகே விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை இயங்கத் தடை விதித்து தொழிலகப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
தே.கல்லுப்பட்டி அருகே செங்குளம் கிராமத்தில் செயல்பட்ட பட்டாசு ஆலையில், வெள்ளிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 5 போ் இறந்தனா். 3 போ் படுகாயமடைந்துள்ளனா். சிறிய ரக வெடிகள் தயாரிக்க இந்த ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கு மாறாக பல்வேறு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
விபத்து நிகழ்ந்த ஆலையில் தொழிலகப் பாதுகாப்புத் துறை இணை இயக்குநா் சரவணன் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா். விதிமீறல்கள் காரணமாக இந்த ஆலை இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலையின் உரிமையாளா் மற்றும் மேலாளா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.