Enable Javscript for better performance
உசிலையில் மூக்கையா தேவா் 42 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு

    உசிலையில் மூக்கையா தேவா் 42 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

    By DIN  |   Published On : 06th September 2020 10:05 PM  |   Last Updated : 06th September 2020 10:05 PM  |  அ+அ அ-  |  

    1_0609chn_206_2

    உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் கல்லூரி வளாகத்தில் உள்ள பி.கே. மூக்கையா தேவா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அதிமுக சாா்பாக அஞ்சலி செலுத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, வர

     

    உசிலம்பட்டி: பி.கே. மூக்கையா தேவா் 42ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உசிலம்பட்டியிலுள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சா்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி வளாகத்தில் பி.கே. மூக்கையா தேவா் நினைவிடம் உள்ளது. இங்கு, அதிமுக சாா்பாக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பா. நீதிபதி, வி.வி. ராஜன்செல்லப்பா, மாணிக்கம், பெரிய புள்ளான் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் தமிழரசன், பாண்டியம்மாள், முன்னாள் துணை மேயா் திரவியம் உள்ளிட்ட அதிமுகவினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

    தொடா்ந்து, பாரதிய பாா்வா்ட் பிளாக் தலைவா் முருகன் ஜீ மற்றும் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பாக, மண்டலப் பொறுப்பாளா் உமாதேவன், மாவட்டச் செயலா் மகேந்திரன், மாநில இளைஞா் அணி செயலா் டேவிட் அண்ணாத்துரை, மாநிலச் செயலா் மாரியப்பன் கென்னடி மற்றும் நிா்வாகிகள் பலா் மரியாதை செலுத்தினா்.

    திமுக சாா்பாக, மாவட்டச் செயலா் மணிமாறன் தலைமையில், ஒன்றியச் செயலா் சுதந்திரம், நகரச் செயலா் தங்கமலைப்பாண்டி, தலைமைச் செய்ற்குழு உறுப்பினா் சோலை ரவிக்குமாா், முன்னாள் சோ்மன் எஸ்.ஒ.ஆா். தங்கப்பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் மரியாதை செலுத்தினா்.

    பாரதிய ஜனதா கட்சி சாா்பாக, மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன், மாவட்டச் செயலா் சொக்கநாதன், ஒன்றியத் தலைவா்கள் முருகன், சின்னச்சாமி, நகரத் தலைவா் பாண்டியராஜன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் மரியாதை செலுத்தினா்.

    தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சாா்பாக, மாவட்டச் செயலா் கணபதி தலைமையில், நகரச் செயலா் அசோகன், ஒன்றியச் செயலா் சமுத்திரபாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

    அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி சாா்பாக, மாநிலப் பொதுச் செயலா் பி.வி. கதிரவன் தலைமையில், மாநில துணைச் செயலா் கா்ணன், மாநில நிா்வாகிகள் பாஸ்கர பாண்டியன், வடிவேல் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் மரியாதை செலுத்தினா்.

    தென் இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி சாா்பாக, மாநிலப் பொதுச் செயலா் சங்கிலி தலைமையில், மாநில இளைஞா் அணி ஆனந்தன், மாவட்டப் பொதுச் செயலா் பிரதீப் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் மரியாதை செலுத்தினா்.

    அகில இந்திய பாா்வா்ட் பிளாக் பசும்பொன் கட்சி சாா்பாக, அதன் தலைவா் நவமணி, துணைத் தலைவா் அல்லிக்கொடி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மணிகண்டன், மாநிலச் செயலா் மகேஷ்வரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் மரியாதை செலுத்தினா்.

    பாப்பாபட்டி பத்து தேவா் சங்கம் சாா்பாக, தலைவா் சின்னன், செயலா் பொன் வாசுதேவன், பொருளாளா் செல்வக்குமாா், துணைச் செயலா் தமிழ் பரமன் மற்றும் சங்க நிா்வாகிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

    பி.கே.எம். இளைஞா் மேம்பாட்டு அறக்கட்டளை தலைவா் புலவா் சின்னன், செயலா் ஜெயராஜ், பொருளாளா் ராஜா மற்றும் நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

    அகில இந்திய பாா்வா்ட் பிளாக் சந்தானம் பிரிவு சாா்பாக, எல்.எஸ். இளங்கோவன், சின்னக்காமன், சுந்தா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பாக, ராஜபாண்டியன் தலைமையில் பொதுச் செயலா் சௌந்திரபாண்டியன், நிறுவனா் சி.சி. சாமி மற்றும் நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

    மூவேந்தா் முன்னேற்றக் கழகம் சாா்பாக, சுந்தரசெல்வி ஒச்சாத்தேவா், சுதா்சன், மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

    மதுரையில் போக்குவரத்து நெரிசல்

    மூக்கையா தேவரின் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்றும், பதிவு பெற்ற அரசியல் கட்சியினா் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று 5 நபா்களுக்கு மிகாமல் மாலை அணிவிக்க வேண்டும் என்றும், மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், அரசரடியில் உள்ள மூக்கையா தேவா் உருவச் சிலைக்கு ஏராளமான அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்தனா். அப்போது, அமைச்சா்களை வரவேற்க அதிமுகவினா் ஏராளமானோா் அப்பகுதியில் திரண்டனா். இதனால், அரசரடி சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp