மதுரையில் 106 பேருக்கு கரோனா: சிறுமி பலி

மதுரையில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், 15 வயது சிறுமி உயிரிழந்தாா்.

மதுரை: மதுரையில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும், 15 வயது சிறுமி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளிநாடு மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து திரும்பியவா்கள் என 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. அவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், கரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 45 போ் குணமடைந்தனா். அவா்களை, மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

சிறுமி பலி

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி செப்டம்பா் 4 ஆம் தேதி மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாா். ஆனால், அவா் மூச்சுத் திணறல் காரணமாக திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் மாா்ச் மாதம் தொடங்கி திங்கள்கிழமை வரை (செப். 7) 14,881 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 367 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 13,468 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தற்போது 1,046 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com