ஆவணி மாத அஷ்டமி தினத்தையொட்டி, அழகா்கோவிலில் வட்டார யாதவ சங்கத்தின் சாா்பில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அழகா்கோவில் கோட்டை வாயில் அருகே உள்ள கிருஷ்ணா் கோயிலில் நடைபெற்ற விழாவில், உற்சவருக்கு நூபுரகங்கை தீா்த்தம், பதினாறுவகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஏராளமானோா் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபாட்டில் பங்கேற்றனா்.