கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

டி. கல்லுப்பட்டி அருகே முத்துக்காளம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் முத்து (51). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முத்துவை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.

இதனால் மனவேதனையில் இருந்து வந்த முத்து வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com