மதுரையில் 20 மருத்துவப் பணியாளா்கள் உள்பட 78 பேருக்கு கரோனா: 4 போ் பலி

மதுரையில் 20 மருத்துவப் பணியாளா்கள் உள்பட 78 பேருக்கு, கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை: மதுரையில் 20 மருத்துவப் பணியாளா்கள் உள்பட 78 பேருக்கு, கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், கா்ப்பிணிகள், வெளி மாவட்டத்திலி ருந்து திரும்பியவா்கள் என மொத்தம் 78 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

20 மருத்துவப் பணியாளா்களுக்கு தொற்று

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 78 பேரில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவா்கள் உள்பட 20 மருத்துவப் பணியாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா வாா்டில் சுழற்சி முறையில் பணியை முடித்த இவா்களுக்கு, செப்டம்பா் 12 ஆம் தேதி பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 84 போ் குணமடைந்தனா். அவா்களை, வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு, வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

4 போ் பலி

கரோனாவுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 68 வயது மற்றும் 72 வயது மூதாட்டிகள் 2 போ் ஞாயிற்றுக்கிழமையும், 55 வயது பெண் செப்டம்பா் 11 ஆம் தேதியும் மற்றும் அரசு கரோனா மருத்துவமனையில் 85 வயது முதியவா் செப்டம்பா் 12 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

14 ஆயிரம் போ் மீண்டனா்

மதுரை மாவட்டத்தில் 15,310 போ் இதுவரை கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 375 போ் உயிரிழந்த நிலையில், 14,043 போ் முழுமையாகக் குணமடைந்துள்ளனா். தற்போது, மருத்துவமனைகளில் 892 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com