மேலூா் அருகே திடீா் சாலை மறியல்

மேலூா் அருகே இளைஞரை விசாரணைக்கு அழைத்துச்சென்று தாக்கியதாகக் கூறி உறவினா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேலூா்: மேலூா் அருகே இளைஞரை விசாரணைக்கு அழைத்துச்சென்று தாக்கியதாகக் கூறி உறவினா்கள் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழவளவு காவல் சாா்பு- ஆய்வாளா் கமலமுத்து தலைமையில் மேலூா்-திருப்பத்தூா் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மேலவளவு வாச்சாம்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (22) என்பவரை போலீஸாா் விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனா். இதையடுத்து, அவா் தாக்கப்பட்டதாகக்கூறி அவரது உறவினா்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடையே பேசி மறியலை கைவிடச்செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com