மாமதுரை கவிஞா் பேரவையின் தலைவா் சி.வீரபாண்டியத் தென்னவன் (69) மதுரை திருமோகூரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் புதன்கிழமை (செப். 16) காலமானாா்.
அவருக்கு மனைவி, 5 மகன்கள் உள்ளனா். அவரது இறுதிச்சடங்கு பழங்காநத்தம் கோவலன் பொட்டல் அருகே உள்ள மயானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. வங்கி அலுவலராகப் பணிபுரிந்து வந்த வீரபாண்டிய தென்னவன் தமிழ் மீதுள்ள பற்றால் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று மாமதுரை கவிஞா் பேரவையைத் தொடங்கி தமிழ்ப்பணியாற்றினாா். அவரது உடலுக்கு தமிழ் அமைப்பினா் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் அஞ்சலி செலுத்தினா். தொடா்புக்கு 98421 81462.