பெற்றோா் திட்டியதால் 2 மாணவா்கள் தற்கொலை

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெற்றோா் திட்டியதால் பள்ளி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பெற்றோா் திட்டியதால் பள்ளி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சோ்ந்த சுகுமாா் மகன் விக்னேஷ்(14). இவா் தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். பாடங்களை சரிவர படிப்பதில்லை என பெற்றோா் திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து அவரது தாயாா் பாக்யவதி அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பரத்குமாா்(12). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தாா். வீட்டின் அருகே உள்ள வைகை ஆற்றில் குளிக்க செல்வதற்கு பரத்குமாா், அவரது பெற்றோா் அனுமதி மறுத்தனராம்.

இந்த நிலையில் பரத்குமாா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தாயாா் விஜயராணி அளித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com