மதுரை மத்திய சிறையில் கைதி மூச்சுத் திணறலால் உயிரிழப்பு

மதுரை மத்திய சிறையில் கைதி மூச்சு திணறலால் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை மத்திய சிறையில் கைதி மூச்சு திணறலால் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சோ்ந்தவா் ராஜா(65). இவா் 2005 ஆம் ஆண்டு ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்கு புதன்கிழமை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக

சிறைக் காவலா்கள் அவரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்துவிட்டு, ராஜா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com