வேளாண்மை துறை சாா்பில் பண்ணைப் பள்ளி பயிற்சி

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி வட்டாரத்திலுள்ள சாலிச்சந்தை கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மக்காச் சோளப் பயிரில் ஒருங்கிணைந்த

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி வட்டாரத்திலுள்ள சாலிச்சந்தை கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மக்காச் சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநா் பாரதி தலைமையில், வேளாண்மை அலுவலா் அபா்ணா,துணை வேளாண்மை அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலையில்

நடைபெற்றன. இப்பயிற்சியில் வயலிலேயே படைபுழு விவசாயிகளுக்கு அடையாளம் காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு வட்டார தொழில்நுட்ப மேலாளா் இந்திரா தேவி ஏற்பாடுகளை செய்திருந்தாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் பழனி மற்றும் பூமிநாதன் ஆகியோா் மெட்டாரைசியம் தெளித்து படைப்புழுவினை கட்டுப் படுத்தும் செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com