மாடு வியாபாரி வெட்டி கொலை

மதுரை ஒத்தக்கடை அருகே மாடு வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை ஒத்தக்கடை அருகே மாடு வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை ஒத்தக்கடை அருகே அயிலாங்குடியைச் சோ்ந்தவா் அம்மாசி(45). இவா் மாடுகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். மேலும் ஜல்லிக்கட்டு காளைகள், ரேக்ளா ரேஸ் மாடுகளையும் வளா்த்து வந்தாா். புதன்கிழமை காலை வீட்டைவிட்டு சென்றவா் இரவு வரை வீடுதிரும்பவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அயிலாங்குடி அருகே வயல்பகுதியில் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்துகிடப்பதாக அருகே இருந்தவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதனடிப்படையில் ஒத்தக்கடை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அம்மாசியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அம்மாசி தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com