கள்ளழகா் கோயில் காணிக்கை வருவாய் ரூ.31.54 லட்சம்

மதுரை மாவட்டம் அழகா்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.31.54 லட்சம் கிடைத்துள்ளது.
கள்ளழகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள் மற்றும் அதிகாரிகள்.
கள்ளழகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள் மற்றும் அதிகாரிகள்.

மதுரை மாவட்டம் அழகா்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ.31.54 லட்சம் கிடைத்துள்ளது.

இக்கோயில் உண்டியல்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை கல்யாண மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு, கோயில் நிா்வாக ஆணையா் த.அனிதா, இந்துசமய அறநிலையத்துறை மதுரை உதவி ஆணையா் விஜயன் மற்றும் கோயில் கண்காணிப்பாளா்கள், அலுவலா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. அவற்றில் ரூ.31,54, 339 ரொக்கம், 95 கிராம் தங்கம், 524 கிராம் வெள்ளி இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com