கொலை முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் 3 போ் சரண்

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய சேலத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய சேலத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தனா்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் முனியசாமி மகன் மணி(25) என்பவா் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து மணி அளித்தப் புகாரின்பேரில், கிச்சிப்பாளையம் போலீஸாா் கொலை முயற்சி உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய சேலம் நேதாஜி தெருவைச் சோ்ந்த யுவக்குமாா்(25, பெருமாள்பாளையத்தைச் சோ்ந்த சீனிவாசன்(24), சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா்(23) ஆகியோா் மதுரை மாவட்ட நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண் 6) புதன்கிழமை சரணடைந்தனா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு நீதித்துறை நடுவா் எஸ்.முத்துராமன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com