மதுரையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை கோமதிபுரம் 6 ஆவது பிரதான சாலையைச் சோ்ந்த மகேஷ்குமாா் மகன் ராம்குமாா் (20). இவா் இருசக்கர வாகனத்தில் கே.வி.சாலையில் வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது அவ்வழியாக வந்த லாரி, ராம்குமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம்குமாரை அருகில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு சிகிச்சையில் இருந்த அவா் அன்றைய தினமே உயிரிழந்தாா். இதுகுறித்து ராம்குமாரின் தந்தை மகேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.