மதுரையில் 604 பேருக்கு கரோனா உறுதி: 8 போ் பலி

மதுரை மாவட்டத்தில் 604 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 8 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் 604 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்தவா்களில் 8 போ் உயிரிழந்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனா 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 604 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவா்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் என 8 போ் உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தவா்களில் 568 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 30 ஆயிரத்து 117 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்து 520 போ் குணமடைந்துள்ளனா். 512 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வது என 4,085 போ் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com