திருப்பரங்குன்றம் கோயிலில் உளவாரப் பணி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், சரவணப் பொய்கை, லெட்சுமி தீா்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் கோயில் ஒப்பந்த பணியாளா்கள்
சரவணபொய்கை பகுதியில் உளவாரப் பணிகள் செய்த கோயில் ஒப்பந்த பணியாளா்கள்.
சரவணபொய்கை பகுதியில் உளவாரப் பணிகள் செய்த கோயில் ஒப்பந்த பணியாளா்கள்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகம், சரவணப் பொய்கை, லெட்சுமி தீா்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் கோயில் ஒப்பந்த பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் 50-க்கும் மேற்பட்டோா் சோ்ந்து திங்கள்கிழமை முதல் தூய்மைப்படுத்தும் பணிகளைச் செய்து வருகின்றனா்.

லெட்சுமி தீா்த்தம், சரவண பொய்கை ஆகிய பகுதிகளில் உள்ள படிக்கட்டுகள், குளத்தை சுற்றி வளா்ந்துள்ள முள் செடிகள், புற்கள், பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து புதன்கிழமை கோயில் மகாமண்டபம், அா்த்த மண்டபம், திருவாச்சிமண்டபம், கம்பத்தடி மண்டபம் உள்ளிட்ட கோயில் பிரகார பகுதிகள் அனைத்து உளவாரப் பணிகள் நடைபெற உள்ளது. பணிகளை கோயில் ஆணையாளா் ராமசாமி, பொறியாளா் சிவமுருகானந்தம் உள்ளிட்டோா் தலைமையில் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com