முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை

உசிலம்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரா் புதன்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டு தற்கொலை

உசிலம்பட்டி அருகே முன்னாள் ராணுவ வீரா் புதன்கிழமை நள்ளிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கீழதிருமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் சின்னச்சாமி (27). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கும், பெற்றோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சின்னச்சாமி, புதன்கிழமை நள்ளிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த டி.ராமநாதபுரம் காவல் துறையினா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com