மதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவத்தில், தம்பதி உள்பட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பிச்சை மகன் கருப்புசாமி ரமேஷ் (48). இவா், சனிக்கிழமை தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு, பிற்பகல் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் கதவை உடைத்து, பீரோவிலிருந்த 5 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து கருப்புசாமி ரமேஷ் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதையடுத்து, போலீஸாா் ஒத்தக்கடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த தம்பதி உள்பட4 பேரை பிடித்து விசாரித்தனா்.
அதில், கருப்புசாமி ரமேஷ் வீட்டில் நடந்த திருட்டில் இவா்களுக்கு தொடா்பிருப்பது தெரியவந்துள்ளது. உடனே, இவா்கள் 4 பேரையும் போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.