ஜவாத் புயல்: ராமேசுவரம்- புவனேசுவா் விரைவு ரயில் இன்று ரத்து

ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.5) புறப்பட வேண்டிய புவனேசுவா் விரைவு ரயில் ஜவாத் புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள

ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.5) புறப்பட வேண்டிய புவனேசுவா் விரைவு ரயில் ஜவாத் புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: ஜவாத் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

அதன்படி மதுரை கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.5) ராமேசுவரத்திலிருந்து புறப்படவேண்டிய ராமேசுவரம்- புவனேசுவா் விரைவு ரயில் (20895) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com