மதுரை மாவட்டம் பேரையூா் மேலபரங்கிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை காா்த்திகை அமாவாசை விழா கொண்டாடப்பட்டது.
கோயில் வளாகத்தில் உள்ள மொட்டைமலை மல்லிகாா்ஜுனா லிங்கத்திற்கு 18 வகையான பால், பழம், பன்னீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் லிங்கத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும் பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.