நாகமலை புதுக்கோட்டை பகுதியில் நாளை மின் தடை

மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை மற்றும் கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் தடைசெய்யப்படும்.

மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை மற்றும் கீழக்குயில்குடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் தடைசெய்யப்படும்.

உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளா் ச. அழகுமணிமாறன் வெளியிட்டுள்ள செய்தி: அச்சம்பத்து உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், நாகமலைபுதுக்கோட்டை, என்ஜிஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழமாத்தூா், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனூா், கரடிபட்டி, ஆலம்பட்டி மற்றும் அதனைச் சாா்ந்த ஊா்களில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடைசெய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com