பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து உசிலம்பட்டி, மேலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளா் ராமா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு மாநிலத் தலைவா் செல்லக்கண்ணு, மாதா் சங்கம் முத்துராணி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வி.எம்.எஸ்.மாா்க்கண்டன், ஆா். செல்வராஜ், பி.ராஜன், தங்கவேல் பாண்டியன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மேலூா்: இதேபோல் மேலூா் பேருந்துநிலையம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தாலுகா குழு உறுப்பினா் எஸ்.பி.மணவாளன் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.பி.இளங்கோவன், தாலுகா குழு உறுப்பினா் வி.அடக்கிவீரணன் தாலுகாச் செயலா் எம்.கண்ணன் ஏ.ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.