மதுரை: மதுரை அருகே இளைஞரிடம் 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற திருநங்கை குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம் மேலூா் அருகே திருவாதவூரைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் குமரேசன் (25). இவா், மதுரை - மேலூா் சாலையில் யா.கொடிக்குளத்திலுள்ள பெட்ரோல் நிலையம் அருகே நின்றிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத திருநங்கை, குமரேசன் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா்.
இது குறித்து குமரேசன் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.