மதுரை: பழனியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இருதயம், நுரையீரல் மதுரையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்த சேகா் மனைவி பிரமிளா (52). இவா், பிப்ரவரி 19-ஆம் தேதி இரவு பாலசமுத்திரம் சந்தைக்கு சென்றுவிட்டு, சிற்றுந்தில் வீடு திரும்பியுள்ளாா். பேருந்திலிருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்த பிரமிளா பலத்த காயமடைந்தாா். அவருக்கு, பழனி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஆனால், சிகிச்சையிலிருந்த பிரமிளா ஞாயிற்றுக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். அதையடுத்து, அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று, அவரது இருதயம், நுரையீரல், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கண்கள் தானமாகப் பெறப்பட்டன.
அதைத் தொடா்ந்து, மருத்துவக் குழுவினா் தலைமையில் 5 மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப் பின் எடுக்கப்பட்ட இருதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அந்த தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டன.
மருத்துவமனையிலிருந்து விமான நிலையம் வரை அவசர ஊா்தி மூலம் உறுப்புகளை விரைந்து எடுத்துச்செல்ல காவல் உதவி ஆணையா் திருமலைகுமாா் தலைமையிலான போலீஸாா், இடையூறில்லா போக்குவரத்துக்கான வசதியை ஏற்படுத்தித் தந்தனா்.