பாலியல் கொலை: வடமாநில இளைஞருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரி மனு

பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் வடமாநில இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு 

பாலியல் வன்கொடுமை செய்து சிறுவன் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் வடமாநில இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறைவேற்றக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்தவா் டானிஸ் பட்டேல் (34). புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் பகுதி கல்குவாரியில் வேலை செய்து வந்த இவா், கடந்த 2019 டிசம்பா் 18 ஆம் தேதி கீரனூா் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 17 வயது மனநிலை பாதிக்கப்பட்ட, வாய்பேச முடியாத சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு 18 நாள்களுக்கு பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து டானிஸ் பட்டேலை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம், டானிஸ் பட்டேலுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்த உத்தரவை நிறைவேற்றுவது குறித்து கீரனூா் போலீஸாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து டானிஸ் பட்டேலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com