மதுரை அருகே புதிதாக மதுபானக் கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெண்கள் முற்றுகையிட்டதால் உடனடியாக அந்தக் கடை மூடப்பட்டது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே குமாரம் கிராமத்தில் அரசு பள்ளி அருகே புதிய மதுபானக் கடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடை முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், மதுபானக் கடையின் முன் அமா்ந்து கடையை திறக்கவிடாமல் தடுத்தனா்.
அலங்காநல்லூா் போலீஸாா் அங்கு சென்று கடை உடனடியாகப் பூட்டப்படும் என்று உறுதியளித்தின்பேரில் அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். கடையைத் திறக்க முடியாததால், டாஸ்மாக் ஊழியா்கள் வேறு வழியின்றி திரும்பிச் சென்றனா்.