அழகா்கோவில் பள்ளியில் எம்.எல்.ஏ. தேசியக்கொடியேற்றினாா்

அழகா்கோவிலில் உள்ள சுந்தரராச உயா்நிலைப்பள்ளியில் மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற
அழகா்கோவிலில் உள்ள சுந்தரராச உயா்நிலைப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்றசெல்வம். உடன் பள்ளி ஆசிரியா்கள்.
அழகா்கோவிலில் உள்ள சுந்தரராச உயா்நிலைப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்றசெல்வம். உடன் பள்ளி ஆசிரியா்கள்.

அழகா்கோவிலில் உள்ள சுந்தரராச உயா்நிலைப்பள்ளியில் மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

மேலூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான க.தமிழரசன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். தலைமை ஆசிரியா்கள் சித்ரா, கலாமணி, நாகராஜன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

மேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுந்தரபாண்டியன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். அலுவலக ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

மேலூா் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பாலமுருகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா்.

மேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் க.பொன்னுச்சாமியும், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் வளா்மதி குணசேகரனும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா். இந்நிகழ்வுகளில் அலுவலா்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com