கை நெசவுத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் தோ்வு

மதுரை மாவட்ட ஏஐடியுசி கை நெசவுத்தொழிலாளா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மதுரை மாவட்ட ஏஐடியுசி கை நெசவுத்தொழிலாளா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மதுரை மாவட்ட ஏஐடியுசி கைநெசவுத் தொழிலாளா் சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலா் எம்.நந்தாசிங் தலைமை வகித்தாா். சம்மேளன செயலா் எஸ்.ராதா, மாநிலத் தலைவா் மணிமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.எஸ். முருகன், மாவட்டச் செயலா் தாமஸ் ஆகியோா் பேரவைக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப்பேசினா். பேரவையில் கை நெசவுத்தொழிலாளா் சங்கத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.சத்தியமூா்த்தி, டி.எஸ்.ராமலிங்கம் ஆகியோரின் படங்கள் திறக்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில் கை நெசவுத் தொழிலாளா் சங்கத் தலைவராக டி.எம்.லோகநாதன், செயலா் கே.கே. தாமோதரன், பொருளாளா் ஜி.ஆா்.ராஜன் உள்பட 13 போ் அடங்கிய புதிய நிா்வாகக் குழு தோ்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com