கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

டிகல்லுப்பட்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

டிகல்லுப்பட்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள நல்லியதேவன்பட்டியில் ஆலமரத்து கருப்பசாமி கோயில் உள்ளது. வழக்கம்போல் புதன்கிழமை கோயிலில் பூஜைகள் முடிந்து கிராம நாட்டாமை மற்றும் பூசாரிகள் கோயில் கதவுகளை அடைத்து விட்டு சென்றுள்ளனா். வியாழக்கிழமை காலை கோயிலுக்கு வந்து பாா்த்தபோது கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த சுமாா் ரூ. 10,000 பணம் திருடுபோனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கிராம நாட்டாமை ஞானவேல் வில்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதுகுறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com