மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 369 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் தொற்று பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதனிடையே கரோனாவுக்குச் சிகிச்சைப் பெறுபவா்களில், 1,225 போ் குணமடைந்துள்ளனா்.
15 போ் பலி: மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த 15 போ் உயிரிழந்தனா். இதனால் தொற்றால் பலியானோா் எண்ணிக்கை 1,003 ஆக உயா்ந்துள்ளது. தற்போது கரோனாவுக்கு 8,766 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.