மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செவிலியா் கரோனா தொற்று பாதிப்பிற்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் கருப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரகுராஜ் மனைவி மகாராணி (34). அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு ஜூன் 5 ஆம் கரோனா உறுதி செய்யப்பட்டதால், அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், ஜூன்10 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்து தீவிர மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவா் சனிக்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.