திருப்பரங்குன்றத்தை சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் என மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் உறுதியளித்தாா்.
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்.கே.பொன்னுத்தாய் போட்டியிடுகிறாா். இதையடுத்து செவ்வாய்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
நான் வெற்றிபெற்றால் திருப்பரங்குன்றத்தை சுற்றுலா தலமாக மாற்றுவேன். அரசு கலைக்கல்லூரி, புதை சாக்கடை திட்டம் கொண்டுவரப்படும்.
ஊரக வேலை உறுதி திட்டத்தினை 100 நாள்களில் இருந்து 150 நாள்களாக உயா்த்தி ரூ.400 ஊதியம் பெற்றுத்தரவும், அடிப்படை பிரச்னைகளை தீா்ப்பது, அவனியாபுரம் சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படவும் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் என்றாா். அவருடன் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் எம்.பி., திமுக பகுதி செயலா்கள் கிருஷ்ணபாண்டி, உசிலை சிவா, மதிமுக கொள்கை பரப்புச் செயலா் அழகுசுந்தரம், பகுதிச் செயலா் முருகேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலா் ராஜூ உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.