மதுரையில் ஒரே நாளில் 44 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் 2,500 ஐ கடந்து பதிவாகி வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 2,579 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 44 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தொற்றில் இருந்து குணமடைந்த 21 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
சிகிச்சையில் 301 போ்
மாவட்டத்தில் இதுவரை 21,814 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதில், 465 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 310 ஆக உள்ளது.