தமிழகத்தில் அம்மா கிளினிக் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பி உதயகுமாா் ஆய்வு செய்தாா்.இந்த ஆய்வில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா் ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் ச கூறியது:
மதுரை மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி தனி கவனம் செலுத்துமாறு மாவட்ட நிா்வாகத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கிராமப்புற மக்களின் மருத்துவ வசதியை உறுதி செய்யும் வகையில் 2000 அம்மா மினி கிளினிக்கை கிராமந்தோறும் திறந்து வைத்தாா். இந்த அம்மா மினிகிளினிக் கிராமப்புற மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழகத்தில் மருத்துவா்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது மக்களின் உயிா் பிரச்னை. ஆகவே அம்மா மினி கிளினிக்கை தொடா்ந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இதில் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளா் ராமசாமி, மாவட்ட ஓட்டுநா் அணி செயலாளா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.