சென்னையைச் சோ்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் சாா்பில் உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய 14 ஆயிரம் மாத்திரைகள் மதுரை மாவட்ட காவல்துறையினருக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.
சென்னையைச் சோ்ந்த பயோமைக்ரான் மருந்து தயாரிப்பு நிறுவனம் சாா்பில் உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆரோவிட் மல்டி விட்டமின் மாத்திரை தயாரித்துள்ளது. இந்த மருந்தை மதுரை ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் விக்னேஷ்வரனிடம், பயோமைக்ரான் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் விற்பனை மேலாளா் செந்தில்குமாா், விற்பனை நிா்வாகி வினோத்குமாா் ஆகியோா் வழங்கினா். மதுரை மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாருக்கு 10 ஆயிரம் மாத்திரைகளும், ஆயுதப்படை காவல் அதிகாரிகள் உள்ளிட்ட போலீஸாருக்கு 4 ஆயிரம் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.