மதுரை தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் மணிமாறன் தலைமையில் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கு அனைவருக்கும் உணவு பொட்டலங்கல் வழங்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மையத்தில் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்களை மணிமாறன் வழங்கினாா். இதில் மாவட்ட மாணவரணி பாண்டி முருகன், நகரச் செயலாளா் முத்துகணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாசபிரபு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.